காதலர்கள் இடையே மூக்கை நுழைத்த அண்ணன்.. ஆத்திரத்தில் காதலன் செய்த பகீர் சம்பவம். சேலத்தில் பரபரப்பு

x

சேலம், பஞ்சாங்கி ஏரியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில், அப்பென்ணின் வீட்டுக்கே சென்று ஏழுமலையின் உறவினர்கள் பெண் கேட்டதாகவும், ஏழுமலையின் நடவடிக்கை பிடிக்காமல் பெண் வீட்டார் பெண் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து அப்பெண்ணிடம் ஏழுமலை பேச முயன்றதால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரர் ஏழுமலையை கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, தன் 17 வயது சகோதரனுடன் சேர்ந்து காதலியின் சகோதரர் பைக்கை தீ வைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், விசாரணையில் இருவரும் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்டா பேக் ஐடி மூலம் காதலியின் சகோதரனிடம் இருவரும் பேசியிருக்கின்றனர். இதில், அந்த பேக் ஐடியை பெண் என நினைத்து பெண்ணின் சகோதரர் காதலிக்கவே, உடனே மாற்று செல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொண்ட இருவரும், நீ காதலிக்கும் பெண்ணின் சகோதரர் நாங்கள் என கூறி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இப்படி பழிக்குப்பழியாக இருவரும் மோதி வந்த நிலையில், அதன் நீட்சியே பைக் எரிப்பு சம்பவம் என தெரியவர, இருவரையும் போலீசார் சிறையிலடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்