இன்ஸ்டாவில் வலைவீசிய காதலன்... லிவ் இன் உறவில் வாழ்ந்த காதலி.. போன் வைத்த அடுத்த நொடி...

x

திருச்சியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. 22 வயது இளம் பெண்ணான இவருக்கு, சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரின் காதலுக்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலனை சந்திப்பதற்காக சென்னை வந்த ஐஸ்வர்யா, இளைஞரிடம் தான் வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம் எனவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதால், அதுவரை அவருடைய வீட்டிலே தங்குவதாக கூறியிருக்கிறார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் எதிர்ப்பையும் மீறிய ஐஸ்வர்யா, காதலனுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், பார்ட் டைமாக ஸ்விகியில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமாரை, சம்பவத்தன்று போன் காலில் அழைத்து பேசிய ஐஸ்வர்யா, காதலனுடன் சண்டையிட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள, இளைஞர் சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்