கள்ளக்குறிச்சியில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுவன் - உள்ளே நுழைந்த கட்டுவிரியன் - அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்

x

கள்ளக்குறிச்சியில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுவன் - உள்ளே நுழைந்த கட்டுவிரியன் - அதிகாலையில் நிகழ்ந்த பயங்கரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மாயம்பாடி கிராமத்தில், தூங்கி கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

4 வயது சிறுவன் கிஷோர், தாய், தந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, விடியற்காலை 4 மணி அளவில் கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

வலி தாங்க முடியாமல் கிஷோர் கதறிய நிலையில், பெற்றோர் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சிறுவன் கிஷோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


Next Story

மேலும் செய்திகள்