பைக் 'வீலிங்' வித்தை காட்டிய சிறுவன்..! நீதிமன்றம் அளித்த நூதன தண்டனை..

x

பைக் 'வீலிங்' வித்தை காட்டிய சிறுவன்..! நீதிமன்றம் அளித்த நூதன தண்டனை..

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவன், நீதிமன்ற உத்தரவின்படி, போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளை மேற்கொண்டதுடன் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது கடற்கரை சாலையில் "வீலிங்" செய்த 17 வயது சிறுவனுக்கு கீழ்ப்பாக்கம் சிறுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி கடந்த வாரம், நூதன தண்டனை வழங்கினார்.

அதனடிப்படையில் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அண்ணா சதுக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷுடன் அந்த சிறுவன் சேர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

சிறுவனும் ஆர்வத்தோடு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்து விழிப்புணர்விலும் ஈடுபட்டடார்.


Next Story

மேலும் செய்திகள்