புறாக்களுடன் விளையாடிய சிறுவன்.. நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம் -பெற்றோர் தலையில் இறங்கிய இடி

x

சென்னை, கண்ணகி நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகனான 16 வயது சிறுவன் ஜாக் என்பவர், பரங்கிமலை அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். புறா வளர்ப்பின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் ஜாக், தன் வீட்டின் மொட்டை மாடியில் ஏராளமான புறாக்களை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று புறாக்களுடன் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஜாக், புறாக்களை பிடிக்க முயன்று எதிர்பாராத விதமாக 4ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கிறார். இதை கண்டு பேரதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்