பசுமலை தேரி வந்த மாரிமுத்து உடல் - சோகத்தில் மூழ்கிய தேனி

x

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிச்சடங்குகள், அவரது சொந்த ஊரான, தேனி மாவட்டம் பசுமலை தேரியில் இன்று நடைபெறுகிறது.

பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், சின்னத்திரை பெரியதிரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாரிமுத்துவின் உடலானது சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான, தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை தேரிக்கு, ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. பசுமலை தேரியில் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றே அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்