ஆற்றில் மிதந்த ஆண் சடலம்... பக்கத்தில் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி - உயிரோடு எழுந்து நின்ற நபர்.

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, ஆற்றின் நடுவே இருந்த தண்ணீர் குழாயில், ஆண் நபரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அசைவின்றி கிடந்த நபரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த நபர் உயிரோடு எழுந்து நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்பு மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், நண்பருடன் சேர்ந்து மது அருந்தி போதையில் கிடந்ததும் தெரியவந்தது. பின்பு அவரை கரைக்கு மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், சுவாரசியத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்