மதுரை ரயில் தீ விபத்து உயிரிழந்த 9 பேர் உடல்களை சென்னைக்கு அனுப்பி வைப்பு | Madurai Train Accident

x

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும், உடற்கூராய்வு முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. முன்னதாக, ரயில் பெட்டி தீ விபத்தில் இறந்த ஒன்பது பேரின் உடல்களுக்கும் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மூன்று ஆம்புலன்ஸ் மூலம் 9 பேரின் உடல்களும் சென்னைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்