ஆட்டுக்கறியில் வீசிய கெட்ட வாசனை... பழைய ஆட்டிறைச்சியை விற்ற வியாபாரி? - வைரலாகும் வீடியோ

x

கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆட்டு தொட்டியில் அம்பூர்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலச்சந்தர் என்பவர் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டின் தலை ஆகியவற்றை வாங்கி சென்றுள்ளார்... அதை வீட்டில் சமைக்கையில் தான் பழைய இறைச்சி என தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது... இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் இறைச்சியுடன் ஆட்டு தொட்டிக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்... அப்போது, வியாபாரி அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது... இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வரும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உண்மையைக் கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்