களைகட்டும் கூவாகம் திருவிழா - விழுப்புரத்திற்கு படையெடுக்கும் திருநங்கைகள்

x

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர். கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்