முதியவரிடம் செல்போன் பறிப்பு - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை, பொதுமக்கள் துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைந்த போது, பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர், ராதாகிருஷ்ணன் என்ற முதியவரின் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதனைப் பார்த்த சக பயணிகள் துரத்திச் சென்று பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு விசாரித்ததில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த குமார் என தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்