திடீரென ஊருக்குள் புகுந்த கார்..வீச்சரிவாளுடன் உயிருக்கே மிரட்டல் போதை ஆசாமிகளால் பதற்றத்தில் ஊர்

x

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் மதுபோதையில் காரை ஓட்டி, வீட்டு படிக்கட்டுகளிலும், வாகனங்கள் மீதும் ஏற்றிவிட்டு, கிராம மக்களிடம் அரிவாளை காட்டி, இளைஞரிடம் இருசக்கர வாகனத்தையும் பறித்து தப்பிச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் இருந்து 3 செல்போன், மோடம் மற்றும் வீச்சரிவாளை கைப்பற்றியதோடு, இந்த கும்பலின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்தும், இந்த 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்