"பேருந்தில் லேசாக உரசிய பை" - சரமாரியாக தாக்கிய பெண் காவலர் - கொதித்து எழுந்த சக பயணிகள்

x

அரக்கோணத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணியை தாக்கியதாக, பெண் காவலரைக் கண்டித்து சக பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரக்கோணம் நோக்கிச் சென்ற பேருந்தில், பெண் போக்குவரத்து காவலர் சரளா என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருகில் நின்ற இளைஞரின் பை, பெண் காவலர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர், அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெண் காவலர் மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்