வரதட்சணை கேட்டு கொடுமை - குமரியை அதிரவைத்த இளம்பெண்

x

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மகளுடன் தாய் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், கணவருடன் சேர்த்து வைக்க கோரி போலீசில் அவர் புகாரளித்துள்ளார். கடந்த 10-ம் தேதி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கணவன் மற்றும் அவரது தாயார் தகராறு செய்த நிலையில், அதுகுறித்து புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டிய இளம்பெண்ணின் தாயார், காவல்துறை உயரதிகாரிகள் உதவக்கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்