தவமிருந்து காத்திருந்த மாணவர்களுக்கு - கடைசி நொடியில் வந்த ஷாக்

இந்திய ராணுவத்தில் சேர இன்று நாடு முழுவதும் எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில், சென்னையில் கால தாமதமாக வந்தவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். குறிப்பாக புரசைவாக்கத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன் கூட்டியே வராதவர்கள் அனுமதிக்கப் படாமல் காத்திருந்தனர். அவர்கள் விழுப்புரம், சென்னை அடுத்துள்ள கண்டிகையில் இருந்து வர போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் வர முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com