சென்னை வந்த சீன கப்பலில் திகில் மர்மம்.. உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி

x

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், சீன கப்பலில் வந்த மாலுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீன கப்பல் ஒன்று, 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, அண்மையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலில் வந்த கோங் யூ என்ற மாலுமி சடலமாகக் கிடந்தார். கடந்த 6ஆம் தேதி இந்தோனேசியாவில் கப்பல் இருந்தபோதே கோங் யூ காணவில்லை என அந்நாட்டு துறைமுகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்