திருவாரூரில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து

x

திருவாரூரில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து

திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் பகுதியில் வேலி பிரச்சினையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்பாள் மாதா கோவில் தெருவை சேர்ந்த வீரபாண்டியனுக்கு அவரது பக்கத்து வீட்டு காரர் குமார் என்பவருக்கு வேலு பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நில அளவையரை வைத்து வேலி இருக்கும் இடம் அளக்கப்பட்டப் போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது குமார் தரப்பினர், வீரபாண்டியனின் தரப்பினர் 5 பேர் மீது கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.

படுகாயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடவாசல் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்