மதுபோதையில் Driving.. எதிரே வந்த வாகனத்தில் ஒரே இடி - மப்போடு இறங்கிய கோயில் அதிகாரி

x

இராமேஸ்வரத்தில், மதுபோதையில் காரை ஓட்டி வாகனங்களை இடித்துச்சென்ற ராமநாதசாமி கோயில் எஸ் ஓ-வை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் சென்ற ராமநாதசாமி கோயில் எஸ்.ஓ, எதிரே வந்த வாகனங்களை மதுபோதையில் இடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த பொதுமக்கள், திட்டக்குடியில் அவரை மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்