சாமி வீதியுலாவில் பரவசம்..! மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலியானா மாணவர்..! கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் சிறுதொண்டமாதேவியில் நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவில், சாமி பல்லக்கு தூக்கிச்சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆடி மாதத்தையொட்டி விடிய விடிய சாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், பல்லக்குடன் பிடிமானத்திற்காக கட்டப்பட்ட இரும்பு குழாய், மின் கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்