SI முதல் கான்ஸ்டபிள் வரை.. 85 பேர் - மொத்த ஸ்டேஷனுக்கும் டிரான்ஸ்ஃபர்.. கமிஷனர் போட்ட உத்தரவு.. தெலங்கானாவில் பரபரப்பு

x

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரிந்த காவல் உதவி ஆய்வாளர் முதல் ஊர்க்காவல் படை வீரர்கள் வரை 85 பேர் கூண்டோடு வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஹைதராபாத் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் முதல் ஊர்க்காவல் படையினர் வரை 85 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும், சந்திரசேகர்ராவ் முதல்வராக இருந்தபோது, அந்த காவல் நிலையத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டனர். அவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வது, மாமூல் வாங்குவது, தகவல்களை கசிய விடுவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. உயர் அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 85 பேரையும் கூண்டோடு பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடம் மாற்றி ஹைதராபாத் நகர காவல் ஆணையர் சீனிவாச ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்