"2013-லேயே நாங்க ரெடி.." காத்திருக்கும் 20ஆயிரம் பேர்...

x

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி திருச்சியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கடந்த 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, நியமனத்தேர்வு நடத்துவதை ரத்து செய்துவிட்டு, பணிநியமன ஆணை வழங்கக்கோரி திருச்சியில் உள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2013-ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு தரப்பினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய சுமார் 20 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், இதுவரை பணி வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போட்டித் தேர்வின் மூலம் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்