பாலியல் அசிங்கம் செய்த ஆசிரியர் - தரமான ஆப்பை சொருகிய மாணவிகள்

x

அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அதே பள்ளியில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ராமன் என்ற ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர் தகவல் அறிந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அறிவியல் ஆசிரியர் ராமன் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்