விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட டாஸ்மாக்..."யாரும் வாங்காதீங்க" - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

x

திருவள்ளுவர் தின விடுமுறை முடிந்து காணும் பொங்கல் தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடை திறக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள மதுக்கடையில் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணிக்கு கடை திறந்ததும் மதுபிரியர்கள் முண்டியடித்து மது வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிக விலைக்கொடுத்து மது வாங்கிய நபர், கடை முன்பு நின்றுக்கொண்டு யாரும் அதிக விலை கொடுத்து மது வாங்காதீர் என புலம்பினார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுக்கடையில் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்

கடலூர் மாவட்டம் வேப்பூரில் காணும் பொங்கலையொட்டி மதுக்கடையில் மதுபிரியர்கள் முண்டியடித்து கொண்டு மது வாங்கினர். பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று மது வாங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்