தஞ்சை பெரிய கோவில் நவராத்திரி விழா..பிரமிக்க வைத்த பரதநாட்டியம்..கண் குளிர பார்த்து ரசித்த பொதுமக்கள்

x

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கலைவிழா வரும் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதனிடையே, 6-ஆம் நாள் நிகழ்வில் பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்