"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை" - படித்த பள்ளிக்குச் சென்ற கடற்படை தளபதி

x

இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார், தஞ்சாவூரில் தான் படித்த பள்ளி வகுப்பறைக்குச் சென்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். திருவனந்தபுரத்தை சேர்ந்த ஹரிகுமார், தனது தொடக்கப் கல்வியை தஞ்சாவூரில் உள்ள தூய இருதய நர்சரி, பிரைமரி பள்ளியில் படித்தார். தற்போது இந்திய கடற்படையின் தளபதியாக பணியாற்றும் அவர், தனது மனைவியுடன் பள்ளிக்கு வருகை தந்தார். தான் படித்த வகுப்பறை பெஞ்சில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிய அவர், பின்னர், மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து படிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்த அவர், பள்ளி வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சம் காசோலை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்