அடுத்த 24 மணி நேரத்தில்.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்

x

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்