வண்டலூரில் இருந்து தப்பிய அனுமன் குரங்குகள்.. பக்கா பிளானுடன் கிளம்பிய பூங்கா ஊழியர்கள்

x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய அனுமன் குரங்கை, மண்ணிவாக்கம் பகுதியில் இருந்து பூங்கா ஊழியர்கள் பிடித்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஆண் அனுமன் குரங்குகள் தப்பியோடின. இவற்றை கூண்டு வைத்தும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்கும் முயற்சியில் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மண்ணிவாக்கம் பகுதியில் அனுமன் குரங்கு உலா வருவதாக பூங்கா ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீட்டின் மொட்டை மாடியில் குரங்கை பிடிப்பதற்காக கூண்டில் கேரட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது கேரட்டை எடுக்க வந்த குரங்கை, மயக்க ஊசி செலுத்தி பூங்கா ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். இதே போல் ஊரப்பாக்கம் பகுதியில் சுற்றி வரும் மற்றொரு குரங்கை பிடிக்கும் பணிகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்