இந்தியாவின் ‘ஆன்மீக தலைநகர்’ தமிழகம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

x

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மற்ற நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை என்றும், இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார். சாதுக்களாலும் ரிஷிகளாலும் ஆன்மீகத்தால் உருவாக்கப்பட்ட நமது பாரத நாடு என்றும் கூறினார். நாம் அனைவரும் சிவனின் குழந்தைகள் என்றும் இதுவே சனாதன மையம் என்றும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். திருவண்ணாமலையில் விவேகானந்தர் மண்டபம் உருவாக்கப்படும் என்றும் ஆன்மீகத்தை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்