"தமிழ்நாடு அமைதி பூமி அல்ல என்று காட்ட ஒரு பின்னணி உருவக்கிக் கொண்டியிருக்கிறது" - கி.வீரமணி பரபரப்பு குற்றச்சாட்டு

x

சாதி மோதல்களை உருவாக்கி, தமிழ்நாடு அமைதி பூமியல்ல என்று காட்ட ஒரு பின்னணி உருவாக்கிக் கொண்டிருப்பதாக தி.க. தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியை கண்டித்து, தி.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி சம்பவத்தை தனிப்பட்ட சம்பவமாக கருத‌க்கூடாது என்றார். சாதி மோதல்களை உருவாக்கி, தமிழ்நாடு அமைதி பூமி அல்ல என்று காட்ட ஒரு பின்னணி உருவக்கிக் கொண்டிருப்பதாகவும், அதனை முற்போக்கு கட்சியினர் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்