சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்..தமிழக காங். தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை

x

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆலோசனையை தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கெடுக்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் , 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்