இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து

x

தாம்பரம் - கடற்கரை இடையே செவ்வாய்கிழமை காலை 10.45 மணி முதல் மாலை 3.45 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளன. இதனால், பயணிகள் சிரமத்தை போக்க விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் - சென்ட்ரல் வழித்தடங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்