மணல் கடத்தலைத் தடுத்த தாசில்தார்... நடுரோட்டில் மறித்து கொலை மிரட்டல்..? வாணியம்பாடி அருகே பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் தேங்காய் பட்டறை பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுமனை பட்டா பிரிவில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர், அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்தார். ஜேசிபியை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவரை வழிமறித்து, துறையேறி பகுதியை சேர்ந்த சிவக்குமார் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, சிவக்குமார், அன்பரசன் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் பிரகாஷ் மீது வழக்குபதிவு செய்த போலீசார் , பிரகாஷை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சிவக்குமார் மற்றும் அன்பரசனை தேடி வருகின்றனர்.




Next Story

மேலும் செய்திகள்