தொடையில் இருந்து பாதம் வரை வீக்கங்கள் - கொடுமையை அனுபவித்த மாணவன் - தொண்டையை அடைத்த தந்தையின் பாசம்

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முறையாக முடி வெட்டவில்லை எனக்கூறி, தலைமையாசிரியர் தன்னை தாக்கியதாக 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலம் அருகேயுள்ள பி. அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறிய நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர், தந்தையிடம் புகாரளித்துள்ளார். மகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவரின் தந்தை, பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்