தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு - "குடிக்க நல்ல தண்ணியே இல்ல".. புலம்பும் மக்கள்

x

கரூரில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் ஆய்வு நடத்தினார். பாலம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களின் வீடுகளை ஆய்வு செய்த அவர், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா, சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பல்வேறு குறைகளை தூய்மை பணியாளர்கள் அவரிடம் கோரிக்கைகளாக முன்வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளை தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்