திடீரென மண்டியிட்டு ஒப்பாரி வைத்த கிராம மக்கள் - கலெக்டர் ஆபிசில் பரபரப்பு

x

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து செல்லும் உபரிநீரை, வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்லும், சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நானூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் வசித்துவரும் சூரப்பள்ளி கிராமத்தில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் நிலத்தை விட்டு விடுமாறும் அப்பகுதி மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மண்டியிட்டு ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். பின்பு போலீசார் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்