திடீரென தீ பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்..திகுதிகுவென எரியும் காட்சிகள்..அவதியில் மக்கள்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தளிர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் மின் விநியோகம் வழங்க,100 கிலோ வாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த டிரான்ஸ்பார்மர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் துணைமின் நிலையத்துக்கு தகவல் அளித்ததை அடுத்து தீ அணைக்கப்பட்டது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது....


Next Story

மேலும் செய்திகள்