திடீரென திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு..! நள்ளிரவில் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரகாஷ். திமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நிலையில், அவரது மனைவி குன்னத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று (நவ.22) மதியம் 1 மணியளவில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். நள்ளிரவிலும் சோதனை நடைபெற்ற நிலையில், ராஜபிரகாஷிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மகளுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களுக்கு இவர் சென்னையில் நிலம் வாங்கி கொடுத்ததாகவும் தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்