வானில் திடீரென சூழ்ந்த கருமேகம்.. ஜில்லென்று இடியுடன் கொட்டிய மழை.. குளிர்ந்த தமிழகம்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது...

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

தஞ்சாவூரில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

சிவகாசியில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்..

இதே போல் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது..


Next Story

மேலும் செய்திகள்