திடீரென நிறம் மாறிய கடல் - செத்து ஒதுங்கிய மீன்கள் - தூத்துக்குடியில் அதிர்ச்சி

x

தூத்துக்குடி அருகே பச்சை நிறத்தில் கடல்நீர் மாறிய நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருவைகுளம் கடல் பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதுடன், மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அருகிலுள்ள இரசாயன மற்றும் மீன் அரவை ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவினால் கடலின் நிறம் மாறியிருக்கலாம் என கூறிய மீனவர்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுனர்.


Next Story

மேலும் செய்திகள்