பேருந்தின் பின்புறம் தொங்கிபடி பயணம் ஆபத்தை உணராத மாணவர்களின் பதை பதைக்க வைக்கும் வீடியோ

x

தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியிலும், பேருந்தின் பின் பக்கம் உள்ள ஏணியைப் பிடித்து தொங்கியவாறும் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... டையம், அம்பாசமுத்திரம் வழியாக நெல்லை நோக்கி சென்ற இந்த அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் தொங்கியபடி சென்ற நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பாக அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்கிட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்