தெருவோர வியாபாரிகள் - தமிழக அரசு அதிரடி உத்தரவு | Tn Govt

x

சென்னை மாநகரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வியாபாரத்தை முறைப்படுத்தவும் குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. குழுவின் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு 12 உறுப்பினர்களைத் தமிழக அரசு நியமித்துள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற தெருவோர வியாபாரிகள் வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட மோனிஷா, கண்ணன், ஜெனிபர், பாலமுருகன், சித்ரா, பலராமன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்