ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா.. நம்மாழ்வாரை கைகளில் சுமந்த பட்டர்கள்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ராப்பத்து ஏழாம் திருநாள் விமரிசையாக நடைபெற்றது.

நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருள, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோவில் பட்டர்கள் தங்களது இரு கைகளிலும் ஏந்தியபடி நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கு சேவை சாதிக்க செய்தனர். சுமார் 5 நிமிடங்கள் நம்பெருமாளை கைகளில் ஏந்தியபடியே பக்தர்களுக்கு திருக்கைத்தல சேவை நடத்தப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறும் என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை தரிசித்தனர்


Next Story

மேலும் செய்திகள்