வழிப்பறியில் இறங்கிய கும்பல்.. இறுதியில் மிஞ்சிய மாவுக்கட்டு |

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே, வடமாநில இளைஞரை தாக்கி, செல்போன் பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த அஜய் தாஸ் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பண்ருட்டி பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அஜய் தாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், அவரை தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மதன் குமார், சுனில் ராஜ் உள்ளிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோட முயன்ற 3 பேருக்கு கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து மாவுக் கட்டு போடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்