கோவில் அருகே பூஞ்சை பிடித்த கெட்டுப்போன உணவு..அதிகாரிகள் அதிர்ச்சி

x

திருநள்ளாறு நளன்குளம் அருகே தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல நாட்களுக்கு முன் சமைத்த உணவு, பூஞ்சை பிடித்து விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த அதிகாரிகள், 200க்கும் மேற்கட்ட உணவு பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். தரமற்ற உணவு சுழற்சி முறையில் விற்பனை செய்தது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்