NLC தலைவர் குடும்பத்திற்கு சிறப்பு பூஜை.. திடீரென வழிமறித்த பக்தர்கள்..! நடராஜர் கோவிலில் பரபரப்பு

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில், பக்தர்கள் செல்லும் வழியை மறித்து, பச்சைக் கம்பளம் விரித்து, என்.எல்.சி. தலைவர் குடும்பத்தினருக்கு தீட்சிதர்கள் பூஜை நடத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார் முட்டுப்பள்ளி குடும்பத்தினர் சிறப்புப்பூஜை நடத்துவதற்காக, பக்தர்கள் தரிசனம் செய்யச் செல்லும் பகுதியை மறித்து, கோ பூஜை, பரி பூஜை, கஜ பூஜையை தீட்சிதர்கள் செய்தது, பொதுமக்கள் மற்றும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீட்சிதர்கள் ஆகம விதிகளை மீறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்