விபத்தில் சிக்கிய மகன்...உயிரோடு இருக்கிறாரா இல்லையா...மனு கொடுக்க வந்த தந்தை

x

திருவாரூ ர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்தை சேர்ந்தவர்கள் சௌந்தர்ராஜன் முத்துலட்சுமி தம்பதியினர். சௌந்தர்ராஜன் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூன்றாவது மகன் மணிகண்டன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். இந்த நிலையில் கடைசியாக கடந்த 27 ஆம் தேதி வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தனது அண்ணன் ஐயப்பனுக்கு அழைத்து குடும்பத்தில் உள்ள அனைவருடன் மணிகண்டன் பேசி உள்ளார். அதன் பிறகு கடந்த 30 ஆம் தேதி மணிகண்டன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மணிகண்டன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என கண்டறிய முடியாத நிலையில் தனது மகனை மீட்டுத் தரக்கோரி அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்