தாய் சடலம் முன் ரத்தத்தோடு கிடந்த மகன்.. பெருத்த சந்தேகத்தில் இருந்த தந்தை... - மகனின் செயலால் அதிர்ந்த சென்னை

x

சென்னை ராயப்பேட்டையில் தாயை சுவற்றில் மோதி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ராகேஷ்வரன் என்பவர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராகேஷ்வரன், தனது தாயார் ஸ்ரீபிரியா நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்ததாக, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த செவிலியர், ஸ்ரீபிரியா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் ஸ்ரீபிரியாவின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது கணவர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தாயாரின் சடலத்திற்கு அருகே ராகேஷ்வரன் கைகள் அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனே ராகேஷ்வரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், பின் சந்தேகத்தின் பேரில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது தாயின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்ததையும், பின்னர் தான் தற்கொலைக்கு முயன்றத்தையும் ராகேஷ்வரன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராகேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்