வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகன் - சென்னை மதுரவாயிலில் பரபரப்பு

x

மதுரவாயல் அருகே வீட்டிற்குள் தாய், மகன் இரும்பு ராடால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புலியம்பேடை சேர்ந்த செல்வி அவரது மகன் பூவரசன் ஆகியோர், வீட்டிற்குள் இரும்பு ராடால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். தகவலின் பேரில் இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் உயிரிழந்த நிலையில், லேசான காயமடைந்த செல்விக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. விசாரணையில், தன் மகனை இரும்பு ராடால் தானே தாக்கியதாக செல்வி கூறியதாகவும், அவரை தாக்கியது யார் என போலீசார் கேட்ட போது செல்வி அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 2 பேரையும் கொள்ளையர்கள் தாக்கினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்