கள்ளத்தனமாய் இரவில் நடக்கும் பார்க்க கூடாத ஒன்று..! - மருந்து கூடத்தில்நடக்கும் அசிங்கம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொய்க்குணம் பகுதியில் உள்ள துணை சுகாதாரம் நிலையம் மூலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் துணை சுகாதாரம் நிலையம் சிதிலம் அடைந்துள்ளதால் மருந்து மாத்திரைகள் பாதுகாப்பாக வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தினமும் அச்சத்துடனேயே பணிக்கு வந்து செல்வதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் துணை சுகாதர நிலையத்தின் சிதிலம் அடைந்த பகுதிகளை இரவு நேரத்தில் மது பிரியர்கள் ஆக்கிமித்து கொள்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் பழுதடைந்து காணப்படும் சுகாதார நிலையத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்