ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம்..

x

தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாசார்பட்டியை அடுத்த வெம்பூரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கு விசாரணையை பாதிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்